04 May 2022

Samacheer Kalvi 9th Social Science Unit 13 in Tamil

9th Social Science Geography Unit 13 Book Back Questions Tamil Medium with Answers:

Samacheer Kalvi 9th Standard New Social Science Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Class 9 Social New Syllabus 2022 Geography Unit 2 – நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள் Book Back Solutions available for both English and Tamil mediums. TN Samacheer Kalvi 9th Std Social Science Geography Book Portion consists of  8 Units. Check Unit-wise and Full Class 9th Social Science Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 9th Social Science Geography Unit 13 Tamil Medium Book back answers below:

English, Tamil, Maths, Social Science, and Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 9th Standard Tamil Book Back Answers and 9th Social Science guide Book Back Answers PDF Tamil Medium. See below for the New 9th Social Science Book Back Questions with Answer PDF:




9th Samacheer Kalvi Social Science Book Back Answers in Tamil Medium PDF:

Tamil Medium 9th Samacheer Kalvi Social Science Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check History questions for English and Tamil mediums. Take the printout and use it for exam purposes. Check Samacheer Kalvi 9th Social Science Unit 13 in Tamil below,

அலகு 13: நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள் Book Back Answers in Tamil

Geography(புவியியல்) – அலகு 2

நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்

I. சரியான விடையைத் தேர்வு செய்க:

1. பாறைகளின் சிதைவுறுதலும் அழிதலும் …………….. என்று அழைக்கப்படுகிறது.
அ) வானிலைச் சிதைவு
ஆ) அரித்தல்
இ) கடத்துதல்
ஈ) படியவைத்தல்
விடை: அ) வானிலைச் சிதைவு

2. இயற்கைக் காரணிகளால் நிலம் சமப்படுத்தப்படுதலை ………. என்று அழைக்கின்றோம்.
அ) படிவுகளால் நிரப்பப்படுதல்
ஆ) அரிப்பினால் சமப்படுத்துதல்
இ) நிலத்தோற்ற வாட்டம் அமைத்தல்
ஈ) ஏதுமில்லை
விடை: இ) நிலத்தோற்ற வாட்டம் அமைத்தல்

3. ……………………… ஆற்றின் மூப்பு நிலையில் உருவாகும் நிலத்தோற்றம் ஆகும்.
அ) துள்ளல்
ஆ) வண்டல் விசிறி
இ) டெல்டா
ஈ) மலை இடுக்கு
விடை: இ டெல்டா

4. சுண்ணாம்புப் பாறை நிலத்தோற்றங்கள் உருவாவதற்கு காரணம் ……..
அ) பனியாறு
ஆ) காற்று
இ) கடல் அலைகள்
ஈ) நிலத்தடி நீர்
விடை: ஈ) நிலத்தடி நீர்

5. கீழே கொடுக்கப்பட்டுள்ள நிலத்தோற்றங்களில் எது பனியாறுகளின் படியவைத்தலால் உருவாக்கப் படவில்லை.
அ) சர்க்
ஆ) மொரைன்
இ) டிரம்லின்
ஈ) எஸ்கர்
விடை: அ) சர்க்

6. காற்றின் படியவைத்தலால் உருவாக்கப்படும் மென்படிவுகளைக் கொண்ட நிலத்தோற்றம் ……………… ஆகும்.
அ) காற்றடி வண்டல்
ஆ) பர்கான்
இ) ஹமாடா
ஈ) மணல் சிற்றலைகள்
விடை: அ) காற்றடி வண்டல்

7. கடல் தூண்கள் உருவாவதற்குக் காரணம் ………
அ) கடல் அலை அரித்தல்
ஆ) ஆற்று நீர் அரித்தல்
இ) பனியாறு அரித்தல்
ஈ) காற்றின் படியவைத்தல்
விடை: அ) கடல் அலை அரித்தல்

8. …………. ன் அரித்தல் செய்கையினால் சர்க்குகள் உருவாக்கப்படுகின்றன.
அ) காற்று
ஆ) பனியாறு
இ) ஆறு
ஈ) நிலத்தடி நீர்
விடை: ஆ) பனியாறு

II. பொருத்துக:

1. கிளையாறு             – அ) பனியாற்றின் செயல்பாடு
2. காளான் பாறை   – ஆ) கடல் அலைச் செயல்
3. எஸ்கர்                      – இ) ஆற்றின் மூப்பு நிலை
4. கல் விழுது              – ஈ) ஏயோலியன்
5. ஓங்கல்                     – உ) சுண்ணாம்புப் பாறை

விடை: 1 – இ  , 2 – ஈ , 3 – அ  , 4 -உ  , 5 – ஆ 

III. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை வாசித்து சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:

1. 1. “I” வடிவ பள்ளத்தாக்கு ஆறுகளின் அரித்தல் செயலால் உருவாகிறது.
2. “U” வடிவ பள்ளத்தாக்கு பனியாறுகளின் அரித்தல் செயலால் உருவாகிறது.
3. “V” வடிவ பள்ளத்தாக்கு பனியாறுகளின் அரித்தல் செயலால் உருவாகிறது.
அ) 1, 2 மற்றும் 3ம் சரி
ஆ) 1, 2 சரி
இ) 1 மற்றும் 3ம் சரி
ஈ) 2 மட்டும் சரி
விடை: ஆ) 1, 2 சரி

2. கூற்று I: ஆறுகள் சமன்படுத்துதலின் முக்கிய காரணியாகும்.
கூற்று II :ஆறுகள் ஒடும் சரிவுகளை பொருத்து அதன் செயல்பாடு இருக்கும்.
அ) வாக்கியம் I தவறு II சரி
ஆ) வாக்கியம் I மற்றும் II தவறு
இ) வாக்கியம் I சரி வாக்கியம் II தவறு
ஈ) வாக்கியம் I மற்றும் II சரி
விடை: ஈ) வாக்கியம் I மற்றும் II சரி

3. கூற்று : சுண்ணாம்பு பாறை பகுதிகளில் நிலத்தடி நீர் குறைவாக இருக்கும்.
காரணம் : நீர் சுண்ணாம்பு பாறையில் உட்புகாது.
அ) கூற்று சரி காரணம் தவறு
ஆ) கூற்று தவறு காரணம் சரி
இ) கூற்று மற்றும் காரணம் தவறு
ஈ) கூற்று மற்றும் காரணம் சரி
விடை: அ) கூற்று சரி காரணம் தவறு




IV. சுருக்கமாக விடையளி:

1. வானிலைச்சிதைவு – வரையறு.
விடை:

  • புவியின் மேற்பரப்பு நேரடியாக வளிமண்டல நிகழ்வுகளோடு தொடர்பு கொள்வதால் பாறைகள் சிதைவடைதலுக்கும், அழிதலுக்கும் உட்படுகின்றன.
  • இச்செயல்பாடுகளையே வானிலைச் சிதைவு என அழைக்கின்றோம்.

2. உயிரினச்சிதைவு என்றால் என்ன?
விடை:
மனித மற்றும் தாவர, விலங்கினச் செயல்பாடுகளினால் பாறைகள் சிதைவுறுதலே உயிரினச் சிதைவு எனப்படும்.
(எ.கா) (i) தாவரங்களின் வேர்கள் பாறைகளின் வழியே ஊடுருவிச் சென்று பாறைகளை விரிவடையச் செய்கிறது.

3. ஆற்றின் மூன்று நிலைகள் யாது? அதனோடு தொடர்புடைய இரண்டு நிலத்தோற்றங்களைக் கூறுக.
விடை:

  • இளநிலை – V வடிவப்பள்ளத் தாக்குகள், குறுகிய பள்ளத்தாக்குகள்
  • முதிர் நிலை – வண்டல் விசிறிகள், குருட்டு ஆறுகள்
  • மூப்பு நிலை – டெல்டாக்கள், ஓத பொங்கு முகங்கள்

4. குருட்டு ஆறு என்றால் என்ன?
விடை:

  • ஆற்று வளைவுகள் காலப்போக்கில் பெரிதாகி இறுதியில் ஒரு முழு வளையமாக மாறுகிறது.
  • இம்முழு வளைவுகள் முதன்மை ஆற்றிலிருந்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு ஒரு ஏரியைப் போன்று காட்சி அளிக்கும். இதுவே குருட்டு ஆறு எனப்படும்.

5. கடற்குகை எவ்வாறு கடல் வளைவிலிருந்து வேறுபடுகிறது?
விடை:

  • கடல் அலைகள் தொடர்ந்து கடல் ஓங்கல்களின் மீது மோதுவதால் அடிப்பகுதி அரிக்கப்பட்டு துவாரம் போன்ற அமைப்பை ஏற்படுத்துகின்றன. இவையே கடல் குகைகள் எனப்படுகின்றன. அருகருகே உள்ள இரண்டு கடற்குகைகளின் நீட்டு நிலங்கள்
  • அரிக்கப்படுவதால் இணைந்து ஒரு வளைவு போன்ற அமைப்பை ஏற்படுத்துகின்றன. இவையே கடல் வளைவுகள் எனப்படும். (எ.கா) நீல் தீவு, (அந்தமான் நிக்கோபார்)

6. இந்தியாவில் காணப்படும் ஏதேனும் நான்கு சுண்ணாம்புப்பாறை பிரதேசங்களை பட்டியலிடுக.
விடை:

  • குப்ததாம் குகைகள் – மேற்கு பீஹார்
  • ராபர்ட் குகை – உத்தரகாண்ட்
  • பாண்டவர் குகைகள் – மத்தியபிரதேசம்
  • போரா குகைகள் – ஆந்திரப்பிரதேசம்

7. தொங்கும் பள்ளத்தாக்கு என்றால் என்ன?
விடை:
முதன்மை பனியாற்றினால் உருவாக்கப்பட்ட பள்ளத்தாக்கின் மீது அமைந்திருக்கும் துணைப் பனியாற்றின் பள்ளத்தாக்கு தொங்கும் பள்ளத்தாக்கு ஆகும்.

8. வரையறு,
அ) மொரைன்
ஆ) டிரம்லின்
இ) எஸ்கர்
விடை: அ) மொரைன்
பள்ளத்தாக்கு அல்லது கண்டப் பனியாறுகளால் படிய வைக்கப்பட்டு உருவாக்கப்படும் நிலத்தோற்றங்கள் மொரைன்கள் எனப்படும்.

ஆ) டிரம்லின்
கவிழ்த்து வைக்கப்பட்ட மிகப்பெரிய கரண்டியைப் போன்றோ அல்லது பாதியாக வெட்டப்பட்ட முட்டையைப் போன்றோ காட்சியளிக்கும் மொரைன்கள் டிரம்ளின்கள் எனப்படுகின்றன.

இ) எஸ்கர்
பனியாறுகள் உருகுவதால் அவை கொண்டு வரும் கூழாங்கற்கள், சரளைக்கற்கள் மற்றும் மணல் ஒரு நீண்ட குறுகிய தொடர் குன்று போன்று பனியாற்றுக்கு இணையாகப் படிய வைக்கப்படுகிறது. இதுவே எஸ்கர்கள் ஆகும்.

9. காற்றின் அரித்தல் செய்கையால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்களைப் பட்டியலிடு.
விடை:

  • காளான் பாறை
  • இன்சல் பர்க்
  • யார்டங்

10. கடல் அலை அரிமேடை என்றால் என்ன?
விடை:

  • ஓங்கல்களின் மீது அலைகள் மோதுவதால் சற்று உயரத்தில் அரித்தல் ஏற்பட்டு தோன்றுவது அலை அரிமேடை ஆகும்.
  • இது பென்ச், திட்டு, திடல், சமவெளி எனவும் அழைக்கப்படுகிறது.

V. காரணம் கூறு:

1. வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த மண்டலங்களில் வேதியியல் சிதைவு அதிகமாக ஏற்படுகிறது.
விடை:
ஏனெனில்
இரசாயனச் சிதைவுகளான ஆக்ஸிகரணம், கார்பனாக்கம், கரைசல், நீர்கொள்ளல் ஆகியவை நீர், வெப்பம் இன்றி நிகழாது.

2. ஒதப்பொங்கு முகங்களில் மென்மையான வண்டல் படிவுகள் குறைவாக படிய வைக்கப்படுகிறது.
விடை:
ஏனெனில்,
ஓதப்பொங்கு முகங்களில் நிலத்தோற்றங்களில் படியவைத்தல் செயல் கிடையாது.

3. பாறைகளை அனைத்து திசைகளிலும் அரிக்கும் தன்மை காற்றுக்கு உண்டு.
விடை:
ஏனெனில்,
பூமியின் மேற்பரப்பில் அனைத்து திசைகளிலும் கிடைமட்டமாக நகரக்கூடிய வாயு காற்று ஆகும். பாறை அடுக்குகளின் அடிப்பகுதி மென்பாறைகள் தொடர்ந்து அரிக்கப்படுகின்றன.

IV. வேறுபடுத்துக.

1. இயற் சிதைவு மற்றும் வேதியியல் சிதைவு.
விடை:

இயற் சிதைவு வேதியியல் சிதைவு
இயற்கை சக்திகளால் பாறைகள் வேதியியல் மாற்றம் ஏதும் அடையாமல் உடைபடுவதே இயற் சிதைவு எனப்படுகிறது. பாறைகளில் வேதியியல் மாற்றங்களால் உடைந்து சிதைவுறுகின்றன. இச்சிதைவுறுதலே வேதியியல் சிதைவு எனப்படுகிறது.
பகல் நேரத்தில் அதிக வெப்பம் காரணமாக பாறைகள் விரிவடைந்தும், இரவு நேரத்தில் அதிகக் குளிரின் காரணமாக சுருங்கவும் செய்கின்றன. இதனால் பாறைகளில் விரிசல் ஏற்பட்டு அவை உடைந்து சிதறுகின்றன. ஆக்ஸிகரணம் (Oxidation), கார்பனாக்கம் (Corbonation), கரைதல் (Solution), நீர்க்கொள்ளல் (Hydration) ஆகிய செயல்பாடுகளினால் வேதியியல் சிதைவு ஏற்படுகிறது.

2. டெல்டா மற்றும் ஒதபொங்கு முகம்
விடை:

டெல்டா

 

ஓத பொங்கு முகம்

 

1. டெல்டா ஆற்றின் முகத்துவாரத்தில் முக்கோண வடிவில் படிவுகள் பதிய வைக்கப்படுகின்றன.

2. டெல்டா  உள்ள வண்டல்கள் மென்மையானதாகவும் தாக்கல் உடையதாகும் காணப்படுகிறது.

 

1. ஆறு கடலில் சேரும் இடத்தில் உருவாவது ஓத பொங்கு முகம் எனப்படும்.

2. நில தோற்றத்தில் பொதுவாக செய்யப்படும் படிய வைத்தல் செய்முறைகள் கிடையாது.

 

3. இவ்வாறு முக்கோண வடிவில் உருவாக்கப்பட்ட நிலத்தோற்றம் டெல்டா என கூறப்படுகிறது.

 

3. உதாரணமாக இந்தியாவில் உள்ள நர்மதா மற்றும் தபதி நதிகள்

 

VI. விரிவான விடையளி:

1. வானிலை சிதைவு என்றால் என்ன? வகைப்படுத்துக.
விடை:
வானிலைச் சிதைவு:

  • வளிமண்டல நிகழ்வுகளோடு புவியின் மேற்பரப்பு நேரடியாகத் தொடர்பு கொள்வதால் பாறைகள் சிதைவடைதலுக்கும், அழிதலுக்கும் உட்படுகின்றன செயல்பாடுகளையே ‘வானிலைச் சிதைவு’ எனப்படும். வகைகள்
    • இயற்பியல் சிதைவு
    • இரசாயனச் சிதைவு
    • உயிரினச் சிதைவு

இயற்பியல் சிதைவு:
இயற்பியல் சக்திகளால் பாறைகள் இரசாயன மாற்றம் ஏதும் அடையாமல் உடைபடுதல் ‘இயற்பியல் சிதைவு’ ஆகும். பாறை உரிதல், பாறை பிரிந்துடைதல், சிறு துகள்களாக சிதைவுறுதல் இயற்பியல் சிதைவின் வகைகள்.

இரசாயனச் சிதைவு:
பாறைகளில் இரசாயன மாற்றங்கள் ஏற்படுவதால் உடைந்து சிதைவுறும் நிகழ்வு ‘இரசாயனச் சிதைவு’ எனப்படும். ஆக்ஸிகரணம், கார்பனாக்கம், கரைதல், நீர்க்கொள்ளல் ஆடிகியன இரசாயனச் சிதைவின் வகைகள்.

உயிரினச் சிதைவு

  • தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களால் பாறைகள் சிதைவுறுதல் ‘உயிரினச் சிதைவு’ எனப்படும்.
  • தாவர வேர்கள் பாறைகளின் இடைவெளி வழியே ஊடுருவிச் சென்று பாறைகளை விரிவடையச் செய்தல்,

2. நிலத்தடி நீரின் அரித்தலால் உண்டாகும் நிலத்தோற்றங்களை விவரி.
விடை:
நிலத்தடி நீர் சுண்ணாம்பு நிலப் பிரதேசங்களில் நிலவாட்டம் அமைக்கும் செயல்களினால் பலவித நிலத்தோற்றங்களை ஏற்படுத்தகின்றன.

டெர்ரா ரோஸா:
சுண்ணாம்பு நிலப்பகுதிகளில் சுண்ணாம்பு கரைந்து சிதைவுற்ற பின்னர் எஞ்சிய செம்மண் படிவு உருவாக்கும் நிலத்தோற்றம். (சிகப்புக்கு காரணம் இரும்பு ஆக்சைடு).

பேப்பீஸ்:
கரடு முரடான சுண்ணாம்புப் பாறைகளிடையே நிலத்தடி நீர் தெளிந்து ஓடும்போது ஏற்படும் நீண்ட அரிப்புக் குடைவுகள் ‘பேப்பீஸ்கள்’ ஆகும்.

உறிஞ்சு துளைகள்:
சுண்ணாம்பு பாறைகள் கரைதலினால் ஏற்படும் புனல் வடிவப் பள்ளங்கள் ‘உறிஞ்சு துளைகள்’ ஆகும்.

குகைகள் மற்றும் அடிநிலக் குகைகள்:
கரியமில அமிலம் சுண்ணாம்பு பாறைகளில் வினைபுரிவதால் ஏற்படும் வெற்றிடம் குகை’ எனப்படும்.

அடிநிலக் குகைகள்:
உருவத்திலும் அளவிலும் வேறுபட்டு தரைப்பகுதி சமமற்றுக் காணப்படும் குகைகள் அடிக்கல் குகைகள் எனப்படும்.

3. பனியாறு என்றால் என்ன?
விடை:
பனியாறு:
பனிக்குவியல் மண்டலத்திலிருந்து பெரிய அளவிலான பனிக்கட்டிகள் மெதுவாக நகர்வதே ‘பனியாறு எனப்படும். பனியாறுகள் அவை உற்பத்தியாகும் இடங்களை அடிப்படையாகக் கொண்டு

  • கண்டப்பனியாறு
  • பள்ளத்தாக்குப் பனியாறு என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

கண்டப் பனியாறு:
கண்டங்களில் அடர்ந்த பனிபோல் மூடப்பட்டிருக்கும் பரந்த நிலப்பரப்பு ‘கண்டப்பனியாறு’ எனப்டும்.

பள்ளத்தாகுப் பனியாறு:
பனி மூடிய மலைத்தொடர்களில் இருந்து உற்பத்தியாகும் பனியாறு பள்ளத்தாக்குப் பனியாறு’ எனப்படும்.

4. காற்று படியவைத்தல் செயலினை விவரி.
விடை:

  • காற்று வீசும் திசைக்கு குறுக்கே அமைந்த தடைகள் (புதர்கள், காடுகள், பாறைகள்) காற்றின் வேகத்தை தடுப்பதால், காற்றினால் கடத்தப்பட்ட படிவுகள் காற்று வீசும் பக்கத்திலும் அதன் மறுபக்கத்திலும் படியவைக்கப்படுகின்றன.
    – காற்றின் படியவைத்தலால் எற்படும் நிலத்தோற்றங்கள்

    • மணல் குன்று
    • பர்கான்
    • காற்றடி வண்டல்

மணல் மேடு

  • பாலைவனங்களில் வீசும் மணல் புயல் மிக மிக அதிகமாக மணலைக் கடத்துகின்றன. புயலின் வேகம் குறையும் போது கடத்தப்பட்ட மணல் அதிக அளவில் படியவைக்கப்படுகின்றன. இவ்வாறு குன்று அல்லது மேடாகக் காட்சியளிக்கும் மணல் படிவு ‘மணல் மேடு’ எனப்படும்.
    – மணல் மேடுகள்

    • பர்கான்
    • குறுக்கு மணல்மேடு
    • நீண்ட மணல் மேடு என பலவகைப்படும்.

காற்றடி வண்டல்:
பரந்த பிரதேசத்தில் படிய வைக்கப்படும் மென்மையான, நுண்ணியப்படிவுகளே ‘காற்றடி வண்டல்’ எனப்படும்.

பர்கான்:
பிறை வடிவத்தில் தனித்துக் காணப்படும் மணல் மேடுகள் பர்கான்கள் எனப்படும். (காற்று வீசும் திசை – மென் சரிவு, எதிர்பக்கம் வன் சரிவு).

VIII. உயர் சிந்தனை வினா:

1. பாலைவனங்களில் சமன்படுத்துதலின் ஒரே காரணி காற்றாகும்.
விடை:
பாலைவனங்களில் புதர்கள், காடுகள், மலைகள் அதிகம் மணல் பரப்பே அதிகம். வெப்பக்காற்று அதிகம் வீசும். தங்கு தடையின்றி வீசும் இவ்வெப்பக்காற்று காற்று வீசும் பக்கத்திலும், மறுபக்கமும் படிய வைக்கிறது. எனவே பாலைவனப் பகுதியை சமன் செய்கிறது.

2. சுண்ணாம்புப் பாறைப்பகுதிகளில் மேற்பரப்பில் வழிந்தோடும் நீரை விட நிலத்தடி நீர் அதிகம். ஏன்?
விடை:
சுண்ணாம்புப் பாறைப் பகுதியில் நீர் எளிதில் உறிஞ்சுதுளை வழியாக கீழே சென்று விடும். அதனால் வழிந்தோடும் நீரை விட நிலத்தடி நீர் அதிகம்.

3. மூப்புநிலையில் ஆறுகள் இளநிலையை விட அகன்று காணப்படுகிறது.
விடை:

  • இளநிலை ஆறு ஆரம்ப நிலையில் செங்குத்தான மலைச் சரிவுகளில் உருண்டோடுகின்றன. பாய்ந்தோடும்போது பள்ளத்தாக்கை அகலமாகவும், ஆழமாகவும் அரித்துச் செல்கின்றன.
  • மூப்பு நிலையில் அரித்துக் கடத்தி வரப்பட்ட பொருட்கள் தாழ் நிலப்பகுதியில் மெதுவாகச் சென்று நிலத்தை சமன் செய்து அகன்று காணப்படும்.

Other Important links for 9th Social Science Book Back Solutions:

Click Here to Download 9th Social Science Book Back Answers – 9th Social Science Book Back Answers

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *