07 Jun 2022

Samacheer Kalvi 8th Science Unit 16 Answers in Tamil

Samacheer Kalvi 8th Science Unit 16 Book Back Answers in Tamil:

Samacheer Kalvi 8th Standard New Science Book Back 1 Mark and 2 Mark Question & Answers PDF uploaded and available below. Class 8 New Syllabus 2021 to 2022 Book Back Question & Answer available for both English and Tamil Mediums. 8 ஆம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தக வினாவிடைகள் அலகு 16 – நுண்ணியிரிகள் Answers/Solutions are provided on this page. 8th Std Science Book consists of 23 units, All Science Book Back One, and Two Mark Solutions are given below.

Check Unit wise and  Samacheer Kalvi 8th Science Book Back Solutions Answers in Tamil PDF format for Free Download. English, Tamil, Maths, Science, and Social Science Book Back Question and Answer is available in PDF. Class 8th Standard Science Book Back Answers PDF. Check the Science book back Answers below. See below for the 8th New Science Syllabus Book Back guide/Answers free PDF download:




Samacheer Kalvi 8th Science Book Back Solutions in Tamil PDF:

8th Science Subject 1 Mark and 2 Mark Solutions PDF available below. Click the Download option to download the book back 1 Mark & 2 Mark questions and answers. Take the printout and use it for exam purposes. Samacheer Kalvi 8th Science Unit 15 Answers in Tamil are given below.

அறிவியல் பாடப்புத்தக வினாவிடைகள்

அலகு 16 – நுண்ணியிரிகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

1. நுண்ணுயிரிகள் ……………………….. இல் அளவிடப்படுகின்றன.
அ) செமீ
ஆ) மிமீ
இ) மைக்ரான்
ஈ) மீட்டர்
விடை: இ) மைக்ரான்

2. உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளின் பண்புகளைப் பெற்றவை ………………….
அ) புரோட்டோசோவா
ஆ) வைரஸ்
இ) பாக்டீரியா
ஈ) பூஞ்சை
விடை: ஆ) வைரஸ்

3. ……………………. ஒரு புரோகேரியோட்டிக் நுண்ணுயிரியாகும்.
அ) வைரஸ்
ஆ) ஆல்கா
இ) பூஞ்சை
ஈ) பாக்டீரியா
விடை: ஈ) பாக்டீரியா

4. பாக்டீரியாக்கள் வடிவத்தின் அடிப்படையில் ………………………… பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன
அ) 2
ஆ) 3
இ) 4
ஈ) 5
விடை: இ) 4

5. மனிதருக்கு சாதாரண சளியை உண்டாக்கும் நுண்ணுயிரி ………………………. என அழைக்கப்படுகிறது
அ) பிளாஸ்மோடியம்
ஆ) இன்ஃபுளூயன்ஸா
இ) விப்ரியோ காலரே
ஈ) ஆப்தோவைரஸ்
விடை: ஆ) இன்ஃபுளூயன்ஸா

II. கோடிட்ட இடத்தை நிரப்புக:

1. ……………….. பூஞ்சையிலிருந்து தயாரிக்கப்படுவது பெனிசிலியம் என்றழைக்கப்படுகிறது
விடை: பெனிசிலியம் கிரைசோஜீனம்

2. ………………….. என்பவை நோய்த் தொற்றுடைய புரதத் துகள்களாகும்
விடை: பிரியான்

3. செல்லுக்கு வெளியே காணப்படும் வைரஸ்கள் …………………….. எனப்படுகின்றன.
விடை: விரியான்

4. நுண்ணுயிரிகளை ……………………. ன் உதவியுடன் காண முடியும்
விடை: நுண்ணோக்கியின்

5. ஒரு முனையில் கசையிழைகளைப் பெற்ற பாக்டீரியாக்கள் …………………….. ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
விடை: ஒருமுனை ஒற்றைக்கசையிழை

III. சரியா அல்லது தவறா எனக் கூறுக. தவறான வாக்கியத்தைத் திருத்தி எழுதுக:

1. நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகள் நோய்க்கிருமிகள் என அழைக்கப்படுகின்றன.
விடை: சரி

2. பெண் அனோபிலஸ் கொசுக்கள் டெங்கு வைரஸ் கிருமிகளைப் பரப்புகின்றன.
விடை: தவறு – பிளாஸ்மோடியத்தை

3. சின்னம்மை ஒரு தொற்று நோயாகும்
விடை: சரி

4. சிட்ரஸ் கேன்கர் பூச்சிகளால் பரவுகிறது
விடை: தவறு – காற்று, நீர் ஆகியவற்றால்

5. ஈஸ்ட் அதிக அளவில் ஆல்கஹாலை உற்பத்தி செய்யப் பயன்படுகிறது.
விடை: சரி




IV. பொருத்துக. தொகுதி:

8th Science Book Back Answers in Tamil

V. கீழ்க்காணும் கூற்றினை ஆராய்ந்து சரியான ஒன்றைத் தெரிவு செய்யவும்:

1. அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி

1. கூற்று: மலேரியா புரோட்டோசோவாவினால் உண்டாகிறது.
காரணம்: இந்நோய் கொசுவினால் பரவுகிறது
விடை:
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

2. கூற்று : ஆல்காக்கள் பிறசார்பு உயிரிகளாகும்.
காரணம் : அவை பச்சையத்தைப் பெற்றிருப்பதில்லை.
விடை:
கூற்று, காரணம் – இரண்டும் தவறு.

VI. மிகச் சுருக்கமாக விடையளி:

1. நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியாவின் பெயரை எழுதுக.
விடை: ரைசோபியம், சயனோ பாக்டீரியா, நாஸ்டாக்

2. வினிகர் தயாரிக்கப் பயன்படும் பாக்டீரியாவின் பெயரை எழுதுக.
விடை: அசெட்டோபாக்டர் அசிட்டை

3. ஏதாவது மூன்று புரோட்டோசோவாக்களின் பெயர்களை எழுதுக.
விடை:

  • பாரமீசியம்
  • யூக்ளினா
  • அமீபா

4. பெனிசிலியத்தைக் கண்டறிந்தவர் யார்
விடை: சர் அலெக்ஸாண்டர் பிளம்மிங் என்பவரால் 1926 இல் கண்டறியப்பட்டது.

5. தடுப்பூசி போடுவதன் மூலம் எந்த நோயைத் தடுக்கலாம்?
விடை: தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, காசநோய்.

VII. சுருக்கமாக விடையளி:

1. வடிவத்தின் அடிப்படையில் நான்கு வகையான பாக்டீரியாக்களின் பெயர்களை எழுதுக.
விடை:
அ) பேசில்லை – கோல்வடிவ பாக்டீரியா எ.டு. பேசில்லஸ்
ஆ) ஸ்பைரில்லா – சுருள்வடிவ பாக்டீரியா
எ.டு. ஹெலிகோ பாக்டர் பைலோரி
இ) காக்கை – கோள அல்லலது பத்து வடிவ பாக்டீரியா
எ.டு. ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியா
ஈ) விப்ரியோ – கமா வடிவ பாக்டீரியா எ.டு. விப்ரியோ காலரா

2. எதிர் உயிர்க்கொல்லி என்றால் என்ன?
விடை:
ஆன்டி என்ற வார்த்தை எதிராக என்று பொருள் ஆகும்.

  • எதிர் உயிர்க்கொல்லி பொருள்கள் உயிருடன் உள்ள உயிரினங்களிலிருந்து பெறப்படுகின்றன.
  • இது மற்ற உயிரினங்களுக்கு நச்சாக உள்ளது.
    எ.டு. ஸ்ட்ரெப்டோமைசின்

3. நோய்க்கிருமிகள் என்றால் என்ன?
விடை:

  • சில நுண்ணுயிரிகள் மனிதன், விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு தீங்கு விளைவிக்கின்றன.
  • அவை நோய்களை உண்டாக்குவதால் நோய்க்கிருமிகள் என்றழைக்கப்படுகின்றன.

4. நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகள் மனிதரில் எவ்வாறு நுழைகின்றன?
விடை:

  • நோய்க்கிருமிகள் உடலுக்குள் தோல், வாய் அல்லது மூக்கின் வழியாக உள்ளே நுழைந்து நோய்களை ஏற்படுத்துகின்றன.
  • வைரஸினால் உண்டாகும் ஃப்ளூ காய்ச்சல் காற்றின் மூலம் பரவுகிறது.
  • நோயாளிகள் தும்மும்போது தெறிக்கும் திவலைகளிலுள்ள வைரஸ்கள் காற்றில் பரவி நலமான ஒருவரின் சுவாசத்தின் போது உள் நுழைகின்றன.

5. விவசாயத்தில் நுண்ணுயிரிகள் அத்தியாவசியமானவை ஏன்?
விடை:

  • நுண்ணுயிரிகள் கழிவுகளை மட்கச் செய்வதால், சிதைப்பவைகள் என அழைக்கப்படுகின்றன.
  • இந்நிகழ்வின் போது நைட்ரேட்டுகள் மற்றும் கனிம ஊட்டப் பொருட்கள் மட்டும் கழிவுகளிலிருந்து வெளியேறி மண்ணை வளமுடையதாக்குகின்றன.
  • இந்த உரம் இயற்கை உரம் என்றழைக்கப்படுகிறது.
  • ரைசோபியம், சயனோ பாக்டீரியா, நாஸ்டாக் நைட்ரஜனை நிலைப்படுத்துகின்றன.
  • பயிர்களுக்கு தீங்குயிர்களிடமிருந்து பாதுகாப்பதில் நுண்ணுயிரிகள் உதவுகின்றன.

 

VIII. விரிவான விடையளி:

1. பாக்டீரியா மற்றும் அதன் அமைப்பினைப் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
விடை:

  • பாக்டீரியங்கள் ஒரு செல்லாலான புரோகேரியோட்டுகள்
  • இவை வகைப்பாட்டியலில் மொனிரா என்பதன் கீழ் இடம் பெற்றுள்ளது.
  • பாக்டீரியா 1μm – 5μm அளவுடையது
  • அவை காற்று சுவாச பாக்டீரியா, காற்றில்லா சுவாச பாக்டீரியா என இருவகைப்படும்.

செல்லின் அமைப்பு :

  • பாக்டீரியாவின் வெளி அடுக்கு செல் சுவரினால் ஆனது.
  • உட்கரு பொருள்கள் நியூக்ளியாய்டு எனப்படும்.
  • இதில் உட்கரு சவ்வு காணப்படுவதில்லை.
  • சைட்டோபிளாசத்தில் கூடுதலாகக் காணப்படும் குரோமோசோமல் டி.என்.ஏக்கள் பிளாஸ்மிட் என அழைக்கப்படுகின்றன.
  • புரதச் சேர்க்கையானது 70S வகை ரைபோசோம்களால் நடைபெறுகிறது.
  • சவ்வினால் சூழப்பட்ட செல் நுண்ணுறுப்புகள் (மைட்டோ காண்ட்ரியா, கோல்கை உடலம், எண்டோபிளாச வலைப்பின்னல்) காணப்படுவதில்லை.
  • கசையிழையினால் இடப்பெயர்ச்சி நடைபெறுகிறது.

8th Science Book Back Answers in Tamil

2. மருத்துவத் துறையில் நுண்ணுயிரிகள் எவ்வாறு பயன்படுகின்றன?
விடை:
நாம் நுண்ணுயிரிகளிலிருந்து எதிர் உயிர்க் கொல்லிகள் மற்றும் தடுப்பூசிகளைப் பெறலாம்

எதிர் உயிர்க் கொல்லிகள்:

  • ஆன்டி என்றவார்த்தை எதிராக என்று பொருள்படும் எதிர் உயிர்க் கொல்லிபொருள்கள் உயிருடன் உள்ள உயிரினங்களிலிருந்து பெறப்படுகின்றன.
  • இது மற்ற உயிரினங்களுக்கு நச்சாக உள்ளது.
  • சர் அலெக்ஸாண்டர் பிளம்மிங் 1928 இல் பென்சிலின் என்ற எதிர் உயிர்க்கொல்லியை பென்சிலியம் கிரைசோ ஜீனம் என்ற பூஞ்சையிலிருந்து உருவாக்கினார்.
  • இது டிப்தீரியா, டெட்டனஸ் போன்ற நோய்களை குணப்படுத்துகிறது.
  • ஸ்ரெப்டோமைசீன், ஸ்ரெப்டோமைசிஸ் என்ற பாக்டீரியாவிலிருந்து பெறப்படுகிறது.

தடுப்பூசிகள்:

  • தடுப்பூசிகள் இறந்து போன அல்லது பலவீனமாக்கப்பட்ட நுண்ணுயிர்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
  • எட்வர்ட் ஜென்னர் முதன் முதலில் பெரியம்மைக்கான தடுப்பூசியினை கண்டறிந்தார்.
  • நோயாளியின் உடலில் இத்தடுப்பூசி செலுத்தப்படும் போது உடலிலிருந்து நோய் எதிர்ப் பொருள்கள் உற்பத்தியாகி நோய்க் கிருமிகளுக்கு எதிராகப் போரிடுகின்றன.
  • இந்த நோய் எதிர்ப்பொருள்கள் உடலில் தங்கியிருந்து எதிர்காலத்தில் அக்குறிப்பிட்ட நோய்க்கிருமிகளின் தாக்குதலிலிருந்து உடலைப் பாதுகாக்கின்றன.
  • எனவே வாக்சினேஷன் நோய்தடுப்பு என்றும் அழைக்கப்படுகிறது. எ.கா. தட்டம்மைக்கான MMR, காச நோய்க்கான BCG தடுப்பூசி

3. நுண்ணுயிரிகளால் மனிதர்களுக்கு ஏற்படும் பொதுவான நோய்கள் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
விடை:
8th Science Book Back Answers in Tamil

4. மனிதரில் நன்மை தரும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை நாம் எவ்வாறு மேம்படுத்தலாம்?
விடை:

  • காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகள் உண்ணுவதன் மூலமும்
  • நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ளுதல் மூலமும்
  • பதப்படுத்தப்பட்ட உணவினை தவிர்த்தல் மூலமும்
  • ஒலிவ எண்ணெயை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலமும்
  • எதிர் உயிர்க் கொல்லிகளை குறைத்துக் கொள்வதன் மூலம் (எதிர் உயிர்க் கொல்லிகள் சிலசமயம் நன்மை தரும் பாக்டீரியாவையும் அழித்துவிடுகிறது)
    நாம் நன்மை தரும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

5. புரோபயாட்டிக் பற்றி சிறுகுறிப்பு வரைக.
விடை:

  • தயிர் மற்றும் பிற நொதித்தலுக்கு உட்படுத்தப்பட்ட பால் பொருள்களில் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் உயிருள்ள உணவுப் பொருள்கள் புரோபயாட்டிகள் ஆகும். எ.டு. லாக்டோபேசிலஸ் அசிட்டோபிலஸ்.
  • இந்த பாக்டீரியா குடல் பகுதியிலுள்ள நன்மை செய்யும் பல வகையான நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. இவை
  • குடல் புற்றுநோய் ஆபத்தினை குறைக்கின்றன.
  • கொலஸ்ட்ரால் உறிஞ்சுதலைக் குறைக்கின்றன.
  • நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிப்பதால் வயிற்றுப்போக்கு நோய்களைத் தடுக்கின்றன.

Other Important links for 8th Science Book Back Answers in Tamil:

Click here to download the complete 8th Science Book Back Solutions – Samacheer Kalvi 8th Science Book Back Answers




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *