23 May 2022

Samacheer Kalvi 7th Tamil Term 2 Unit 1.5 Answers

7th Tamil unit 1.5 – இலக்கியவகைச் சொற்கள் Book Back Questions with Answers:

Samacheer Kalvi 7th Standard New Tamil Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF in Tamil uploaded and available below. The Samacheer Kalvi Class 7th New Tamil Book Back Answers Term 2 Unit 1.5 – இலக்கியவகைச் சொற்கள் Tamil Book Back Solutions/Answers are available for English and Tamil mediums. TN Samacheer Kalvi 7th Std Tamil Term 2 Book Portion consists of  16 Units. Check Unit-wise and Full Class 7th Tamil Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 7th Tamil Book back answers below:

English, Tamil, Maths, Social Science, and Science Books Back One and Two Mark Questions and Answers available in PDF. Class 7th Standard Tamil Book Back Answers and 7th Tamil guide Book Back Answers PDF. See below for the New 7th Tamil Book Back Questions with Answer PDF:




7th Samacheer Kalvi Book Term 2 Unit 1.5 இலக்கியவகைச் சொற்கள் Tamil Book Back Answers/Solution PDF:

Samacheer Kalvi 7th Tamil Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Tamil Book Back Questions with Answers. Take the printout and use it for exam purposes.

7th Tamil Samacheer Kalvi Book Back Answers

Term 2 Chapter 1.5 – இலக்கியவகைச் சொற்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. எல்லார்க்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல் ……………..
அ) இயற்சொல்
ஆ) திரிசொல்
இ) திசைச்சொல்
ஈ) வடசொல்
Answer: அ) இயற்சொல்

2. பலபொருள் தரும் ஒரு சொல் என்பது ……………………..
அ) இயற்சொல்
ஆ) திரிசொல்
இ) திசைச்சொல்
ஈ) வடசொல்
Answer: ஆ) திரிசொல்

3. வடமொழி என்று அழைக்கப்படும் மொழி …………………………..
அ) மலையாளம்
ஆ) கன்ன டம்
இ) சமஸ்கிருதம்
ஈ) தெலுங்கு
Answer: இ) சமஸ்கிருதம்

பொருத்துக:

1. இயற்சொல் – பெற்றம்
2. திரிசொல் – இரத்தம்
3. திசைச்சொல் – அழுவம்
4. வடசொல் – சோறு
Answer:
1. இயற்சொல் – சோறு
2. திரிசொல் – அழுவம்
3. திசைச்சொல் – பெற்றம்
4. வடசொல் – இரத்தம்




குறுவினா:

1. மண், பொன் என்பன எவ்வகைச் சொற்கள்?
Answer:

  • எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள் இயற்சொற்கள் எனப்படும்.
  • இயற்சொல் பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு வகையிலும் வரும்.
  • மண், பொன் – பெயர் இயற்சொல்

2. இயற்சொல்லின் நான்கு வகைகள் யாவை?
Answer:
இயற்சொல்லின் நான்கு வகைகள்.
இயற்சொல் பெயர், வினை, இடை, உரி ஆகியன நான்கு வகைகளாகும்.

எடுத்துக்காட்டு :
மண், பொன் – பெயர் இயற்சொல்
நடந்தான், வந்தான் – வினை இயற்சொல் அவனை,
அவனால் – இடை இயற்சொல்
மாநகர் – உரி இயற்சொல்

3. குங்குமம், கமலம் என்பன எவ்வகை வடசொற்கள்?
Answer:
கமலம், குங்குமம் என வடமொழியில் இருப்பது போன்றே தமிழில் எழுதுவதைத் தற்சமம் என்பர்.

சிறுவினா:

1. இலக்கிய வகைச் சொற்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
இலக்கிய வகைச் சொற்கள் நான்கு வகைப்படும்

  1. இயற்சொல்,
  2. திரிசொல்,
  3. திசைச்சொல்,
  4. வடசொல்

(i) இயற்சொல் : எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள் இயற்சொற்கள் எனப்படும். எடுத்துக்காட்டு : கடல், கப்பல்

(ii) திரிசொல் : கற்றோருக்கு மட்டுமே விளங்குவதாகவும் இலக்கியங்களில் மட்டுமே பயின்று வருபவையாகவும் அமையும் சொற்கள் திரிசொற்கள் எனப்படும். எடுத்துக்காட்டு : வங்கூழ், அழுவம்.

(iii) திசைச்சொல் : வடமொழி தவிர, பிறமொழிகளில் இருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் திசைச்சொற்கள் எனப்படும். எடுத்துக்காட்டு: சாவி, சன்னல்.

(iv) வடசொல் : வடமொழியிலிருந்து வந்து தமிழில் இடம் பெறும் சொற்கள் வடசொற்கள் எனப்படும். எடுத்துக்காட்டு: வருடம், மாதம்.

2. திரிசொல்லின் வகைகள் குறித்து விளக்குக.
Answer:
திரிசொல்லின் வகைகள் :
திரிசொற்களை ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள் எனவும். பல பொருள் குறித்த ஒரு திரிசொல் எனவும் இருவகைப்படுத்தலாம்.

ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள்
எடுத்துக்காட்டு :
வங்கம், அம்பி, நாவாய் – என்பன கப்பல் என்னும் ஒரே பொருளைத் தருவதால் ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள் என்பர்.

பல பொருள் குறித்த ஒரு திரிசொல் :
எடுத்துக்காட்டு :
இதழ் என்னும் சொல் பூவின் இதழ், உதடு, கண்ணிமை, பனையேடு, நாளிதழ் ஆகிய பல பொருள்களைத் தருவதால் பலபொருள் குறித்த ஒரு திரிசொல் என்பர்.

3. பண்டிகை, கேணி என்பன எவ்வகைச் சொற்கள்? விளக்குக.
Answer:

  • பண்டிகை, கேணி என்பன திசைச் சொற்களாகும்.
  • வடமொழி தவிர, பிற மொழிகளில் இருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் திசைச் சொற்கள் எனப்படும்.
  • முற்காலத்தில் பாண்டி நாட்டைத் தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் வழங்கிய கேணி (கிணறு, பெற்றம் (பசு) போன்ற சொற்களையும் திசைச்சொற்கள் என்றே வழங்கினர்.

கற்பவை கற்றபின்:

1. நாளிதழ் செய்தியொன்றை எடுத்துக் கொண்டு அதில் உள்ள நால்வகைச் சொற்களையும் வகைப்படுத்திப் பட்டியல் உருவாக்குக.
Answer:
(i) வீடுகளிலே நடைபெறும் விஷேசங்களின் போது, வெளியூர்கள் சென்று திரும்பும் போது, பரிசளிப்புகள் நடத்தும் போதும் புத்தகங்கள் வாங்குவது என்று ஒரு – பழக்கத்தைக் கொஞ்சம் வசதியுள்ள வீட்டார் சில காலத்துக்காவது ஏற்படுத்திக் கொண்டால் சுலபத்தில் ஒரு சில புத்தகசாலையை அமைத்து விடலாம்.
விசேஷம் – சிறப்பு
விசேஷம் – வடமொழி

(ii) சன்னல் வழியாக இராமு போவதை கோபு பார்த்துக் கொண்டிருந்தான்.
சன்னல் – சாளரம்
சன்னல் – திசைச் சொல்

(iii) நாவாய் கரையோரம் ஒதுங்கியது
நாவாய் – திரிசொல்
நாவாய் – கப்பல்

(iv) கபிலன் கதை எழுதினான்
எழுதினான் – வினை இயற்சொல்.

Other Important links for 7th Tamil Book Back Solutions:

Click Here to download the 7th Tamil Book Back Answers – Samacheer Kalvi 7th Tamil Book Back Answers

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *