28 May 2022

Samacheer Kalvi 6th Geography Term 1 Unit 1 Answers in Tamil

Samacheer Kalvi 6th Geography Term 1 Unit 1 Book Back Questions and Answers in Tamil:

Samacheer Kalvi 6th Standard Social Science Book Back 1 Mark and 2 Mark Question & Answers uploaded online and available PDF for free download. Class 6th New Syllabus Social Science Term I book back question & answer solutions guide available below for Tamil Medium. 6ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள் பருவம் 1 அலகு 1 – பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் Solutions are provided on this page. Students looking for Samacheer Kalvi 6th Geography Term 1 Unit 1 Answers in Tamil Medium Questions and Answers can check below.

We also provide class 6th other units Book Back One and Two Mark Solutions Guide on our site. Students looking for a new syllabus 6th standard Geography பருவம் 1 அலகு 1 – பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் Book Back Questions with Answer PDF:

For all three-term of 6th standard Social Science Book Back Answers Tamil Medium – Samacheer kalvi 6th Social Science Book Back Answers in Tamil




Samacheer Kalvi 6th Social Science Geography Book Back Unit 1 Term 1 Solution Guide PDF:

TN Class 6th Social Science Geography Subject 1 Mark and 2 Mark Solutions Guide PDF available below. Click the Download option to download the book back 1 Mark & 2 Mark questions and answers. Take the printout and use it for exam purposes.

சமூக அறிவியல் – பருவம் 1

புவியியல் – அலகு 1 – பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்

அ. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. பேரண்டம் உருவாகக் காரணமான நிகழ்வு ______
விடை: பெருவெடிப்பு

2. இரு வான்பொருட்களுக்கு இடையிலான தொலைவை அளக்க உதவும் அளவு _____ ஆகும்.
விடை: ஒளியாண்டு

3. சூரியக் குடும்பத்தின் மையம் _____
விடை: சூரியன்

4. கோள் என்ற வார்த்தையின் பொருள் _____
விடை: சுற்றி வருபவர்

5. அதிக துணைக்கோள்களைக் கொண்ட கோள் _____
விடை: வியாழன்

6. நிலவிற்கு அனுப்பப்பட்ட முதல் இந்திய விண்கலம் _____
விடை: சந்திராயன் – 1

7. புவியின் சாய்வுக் கோணம் _____
விடை: 2312°

8. நிலநடுக்கோடு சூரியனை நேராகச் சந்திக்கும் நாட்கள் ____ மற்றும் _____
விடை: மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23

9. சூரிய அண்மை நிகழ்வின் போது புவி சூரியனுக்கு _____ ல் காணப்படும்.
விடை: மிக அருகில்

10. புவியின் மேற்பரப்பின் மீது ஒளிபடும் பகுதியையும், ஒளிபடாத பகுதியையும் பிரிக்கும் கோட்டிற்கு – என்றுபெயர்.
விடை: ஒளிர்வு வட்டம்

ஆ. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

1. புவி தன் அச்சில் சுழல்வதை இவ்வாறு அழைக்கிறோம்.
அ) சுற்றுதல்
ஆ) பருவகாலங்கள்
இ) சுழல்தல்
ஈ) ஓட்டம்

2. மகரரேகையில் சூரியக்கதிர்கள் செங்குத்தாக விழும் நாள்.
அ) மார்ச் 21
ஆ) ஜூன் 21
இ) செப்டம்பர் 23
ஈ) டிசம்பர் 22

3. சூரியக்குடும்பம் அடங்கியுள்ள விண்மீன் திரள் மண்டலம்.
அ) ஆண்டிரோமெடா
ஆ) மெகலனிக்கிளவுட்
இ) பால்வெளி
ஈ) ஸ்டார்பர்ஸ்ட்

4. மனிதன் தன் காலடியைப் பதித்துள்ள ஒரே விண்பொருள்
அ) செவ்வாய்
ஆ) சந்திரன்
ஈ) வெள்ளி

5. எந்த கோளால் தண்ணீ ரில் மிதக்க இயலும்?
அ) வியாழன்
ஆ) சனி
இ) யுரேனஸ்
ஈ) நெப்டியூன்

இ. பொருந்தாததை வட்டமிடுக.

1. வெள்ளி வியாழன், நெப்டியூன், சனி
விடை:
Samacheer kalvi 6th Social Science Term 1 Unit 1 Answers in Tamil

2. சிரியஸ் ஆண்டிரோமெடா, பால்வெளி, மெகலனிக்கிளவுட்
விடை:
Samacheer kalvi 6th Social Science Term 1 Unit 1 Answers in Tamil

3. புளூட்டோ , ஏரிஸ், செரஸ், அயோ
விடை:
Samacheer kalvi 6th Social Science Term 1 Unit 1 Answers in Tamil

4. வால்விண்மீன், சிறுகோள், விண்வீழ்கல், குறுளைக் கோள்கள்
விடை:
Samacheer kalvi 6th Social Science Term 1 Unit 1 Answers in Tamil

5. தரை ஊர்தி, சுற்றுக்கலம், வானுர்தி விண்கலம்
விடை:
Samacheer kalvi 6th Social Science Term 1 Unit 1 Answers in Tamil

ஈ. பொருத்துக

Samacheer kalvi 6th Social Science Term 1 Unit 1 Answers in Tamil




உ. i. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க.

1. வெள்ளிக் கோள் கிழக்கிலிருந்து மேற்காகச் சுற்றுகிறது.
2. ஜுன் 21 ம் நாளன்று கடகரேகையில் சூரியக் கதிர் செங்குத்தாக விழும்.
3. செவ்வாய்க் கோளுக்கு வளையங்கள் உண்டு.

மேற்கூறிய கூற்றுகளில் சரியானவற்றைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்திக் கண்டறிக
அ) 1 மற்றும் 2
ஆ) 2 மற்றும் 3
இ) 1, 2 மற்றும் 3
ஈ) 2 மட்டும்

ii. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க

கூற்று 1: புவி, நீர்க்கோளம் என அழைக்கப்படுகிறது.
கூற்று 2: புவி தன் அச்சில் சுழலுவதால் பருவ காலங்கள் ஏற்படுகின்றன. சரியான கூற்றினை தேர்ந்தெடுத்து எழுதுக.
அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
ஆ) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
இ) இரண்டு கூற்றுகளும் சரி
ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு.

ஊ. பெயரிடுக.

1. விண்மீன்களின் தொகுப்பு ______
விடை: விண்மீன் திரள்

2. சூரியக் குடும்பத்திற்கு அருகில் உள்ள விண்மீன் திரள் மண்டலம் _______
விடை: பால்வெளி விண்மீன் திரள் மண்டலம்

3. பிரகாசமான கோள் _____
விடை: வெள்ளி

4. உயிரினங்களை உள்ளடக்கிய கோளம் _______
விடை: உயிர்க்கோளம்

5. 366 நாட்களை உடைய ஆண்டு ______
விடை: லீப் ஆண்டு

எ. இரு வார்த்தைகளுக்கு மிகாமல் விடை தருக.

1. உட்புறக்கோள்களைப் பெயரிடுக.
விடை:

  1. புதன்
  2. வெள்ளி
  3. புவி
  4. செவ்வாய்

2. புளூட்டோ ஒரு கோளாக தற்சமயம் கருதப்படவில்லை. காரணம் தருக.
விடை:
புளூட்டோ கிரகத்தின் பாதை நெப்டியூன் கிரகத்தின் வளையத்திற்குள் வருவதால், புளூட்டோவை தனி கிரகமாக கருத முடியாது.

3. சூரிய அண்மை என்றால் என்ன?
விடை:
சூரிய அண்மை ‘ என்பது புவி தன் சுற்றுப்பாதையில் சூரியனுக்கு மிக அருகில் வரும் நிகழ்வாகும்.

4. ஒருவர் 20° வடக்கு அட்சரேகையில் நின்றால், ஓர் ஆண்டில் சூரியன் அவரின் தலை உச்சிக்கு மேல் எத்தனை முறை வரும்?
விடை:
இரண்டு முறை

5. எந்த விண்பொருள் தன் சுற்றுப்பாதையை பிறவிண்பொருட்களுடன் பகிர்ந்து கொள்கிறது? உதாரணம் தருக.
விடை:
குறுங்கோள்கள் தன்
சுற்றுப்பாதையை பிறவிண் பொருட்களுடன் பகிர்ந்து கொள்கிறது.
உதாரணம் : புளூட்டோ, செரஸ், மேக்மேக் மற்றும் ஹௌமிய

ஏ. காரணம் கூறுக.

1. யுரேனஸ் ஏன் உருளும் கோள் என அழைக்கப்படுகிறது?
விடை:

  • வெள்ளிக் கோளைப் போன்றே இக்கோளும் தன் அச்சில் கடிகாரச் சுற்றில் சுற்றுகிறது.
  • இதன் அச்சு மிகவும் சாய்ந்து காணப்படுவதால் தன் சுற்றுப்பாதையில் உருண்டோடுவது போன்று சூரியனைச் சுற்றி வருகிறது.

2. நிலவின் மேற்பரப்பில் தரைக்குழிப் பள்ளங்கள் அதிகமாக காணப்படுகின்றன. காரணம் தருக
விடை:

  • நிலவிற்கு வளிமண்டலம் கிடையாது.
  • இதன் காரணமாக விண்கற்களின் தாக்கத்தால் இதன் மேற்பகுதியில் அதிகளவில் தரைக்குழிப் பள்ளங்கள் காணப்படுகின்றன.

3. புவியின் சுழலும் வேகம் துருவப் பகுதிகளில் சுழியமாக உள்ளது.
விடை:
புவி கோள வடிவமாக இருப்பதால் சுழலும் வேகம் துருவப்பகுதிகளில் சுழியாக உள்ளது.

ஐ. விரிவான விடை தருக.

1. உட்புற மற்றும் வெளிப்புறக் கோள்கள் வேறுபடுத்துக.
விடை:
Samacheer kalvi 6th Social Science Term 1 Unit 1 Answers in Tamil

2. புவியின் சுழலுதல் மற்றும் சுற்றுதல் நிகழ்வுகளால் ஏற்படும் விளைவுகள் யாவை?
விடை:
சுழலுதல் :

  1. புவி தன் அச்சில் தன்னைத் தானே சுற்றுவது சுழலுதல் எனப்படும்.
  2. புவி சுழலுவதன் காரணமாக இரவு பகல் ஏற்படுகிறது.
  3. புவி கோள வடிவமாக இருப்பதால் சூரிய வெளிச்சம் புவியின் ஒரு பகுதியில் மட்டும் படும் அப்பகுதி பகல் பொழுது எனப்படும்.
  4. புவி ஒளிபடாத பகுதி இரவாகவும் இருக்கும்.

சுற்றுதல் :

  1. புவி தன் நீள்வட்டப்பாதையில் சூரியனை சுற்றிவரும் நகர்வு சுற்றுதல் எனப்படும்.
  2. புவி சூரியனை சுற்றி வருவதால் பருவகாலங்கள் ஏற்படுகின்றன.
  3. புவி தன் சுற்றுப்பாதையில் சூரியனை சுற்றி வருவதால் சூரியன் நிலநடுக்கோட்டிற்கு வடக்காகவும், தெற்காகவும் நகர்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
  4. இதனால் மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23 ஆகிய நாள்கள் நிலநடுக்கோட்டுப் பகுதியில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழும்.
  5. இதன் காரணமாக புவியின் அனைத்துப் பகுதிகளிலும் பகல் மற்றும் இரவுப்பொழுது சமமாகக் காணப்படும்.
  6. டிசம்பர் 22ம் தேதி மகரரேகையின் மீது சூரியனின் செங்குத்துக்கதிர்கள் விழுவதால் தென் அரைக்கோளத்தில் பகல்பொழுது அதிகமாகவும் வட அரைக்கோளம் நீண்ட இரவையும் கொண்டிருக்கும்.

3. புவிக் கோளங்களின் தன்மைகள் பற்றி விவரி.
விடை:

  1. உயிரினங்கள் வாழத் தகுதியான கோள் புவியாகும்.
  2. புவியின் மூன்று தொகுதிகள் உள்ளன. அவைபாறைக்கோளம், நீர்க்கோளம், வளிமண்டலம் ஆகும்.
  3. உயிரினங்கள் வாழக்கூடிய குறுகிய மண்டலம் ‘உயிர்க்கோளம்’ ஆகும்.

பாறைக் கோளம்:

  1. புவியின் மேற்பரப்பில் காணப்படும் பாறைகள் மற்றும் மண் அடுக்குகள் பாறைக் கோளம் எனப்படும்.
  2. இந்த நிலப்பரப்பில் உயிரினங்கள் காணப்படுகின்றன.

நீர்க் கோளம்:

1. “‘ஹைட்ரோ” என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல்லே ஹைட்ரோஸ்பியர் ஆகும். இதற்கு நீர்க்கோளம் என்று பெயர். 2. கடல்கள், ஆறுகள், ஏரிகள், மலையுச்சிகளில் காணப்படும் பனியுறைகள், வளிமண்டலத்தில் காணப்படும் நீராவி ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியது.

வளி மண்டலம்:

  1. புவியைச் சுற்றி காணப்படும் பல்வேறு காற்றுத் தொகுதி வளிமண்டலம் எனப்படும்.
  2. வளிமண்டலத்தில் காணப்படும் வாயுக்களில் நைட்ரஜன் (78%) மற்றும் ஆக்ஸிஜன் (21%) முதன்மையான வாயுக்களாகும்.
  3. கார்பன் – டை – ஆக்ஸைடு, ஆர்கான், ஹைட்ரஜன், ஹீலியம், ஓசோன் வாயுக்கள் குறைந்த அளவில் காணப்படுகின்றன.

உயிர்க் கோளம்:

  1. பாறைக்கோளம், நீர்க்கோளம், வளிமண்டலம் ஆகியவற்றோடு தொடர்புடைய உயிரினங்கள் வாழக்கூடிய ஒரு பகுதி உயிர்க்கோளம்’ எனப்படும்.
  2. உயிர்க்கோளம் பல்வேறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
  3. ஒவ்வொரு மண்டலமும் ஒப்பற்ற காலநிலை, தாவரங்கள், விலங்கினங்களைக் கொண்ட பகுதியாக உள்ளது.

Other Important links for Class 6th Book Back Answers:

Tamil Nadu Class 6th Standard Book Back Guide PDF, Click the link – 6th Book Back Questions & Answers PDF

For all three-term of 6th standard Social Science Book Back Answers Tamil Medium – Samacheer kalvi 6th Social Science Book Back Answers in Tamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *